தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் பகுதியில் சிங்கப்பூர் சிட்டிசன் விஜயலட்சுமி சந்திரசேகர் என்பவர் தவறவிட்ட பர்ஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த கே.எம். கார்த்திக் என்பவர் இந்த பர்ஸை கண்டெடுத்து உள்ளார். அவர் நடராஜன் வெங்கடேசன் என்ற முகநூல் கணக்கில் இதுபற்றிய விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 1C பேருந்து நிலையம் அருகே இந்த பர்ஸை கண்டெடுத்துள்ளதாகவும், விஜயலட்சுமி சந்திரசேகர் என்ற பெயரில் சிங்கப்பூர் சிட்டிசன் கார்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பர்ஸை காவல் துறையிடம் ஒப்படைத்ததாகவும், பெயர் கார்த்திக் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூடுதலாக அதில் தொலைபேசி எண்களையும் இணைத்துள்ளார். பர்ஸ் பற்றிய தகவலுக்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள:
? 9843022733
? 9840224934