விமான பயணிகளின் இருக்கையில் 22 லட்சம் மதிப்புள்ள தங்கம்… விட்டு சென்ற பயணியை தேடும் போலீஸ்

trichy-airport-singapore gold

விமான பயணிகளின் இருக்கையில் 22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் சோதனை செய்த அதிகாரிகளுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

தேடப்பட்டு வந்த ஊழியர்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தபோது தூக்கிய போலீஸ்!

பயணிகள் இருக்கை உறைக்குள் மறைத்து வைத்து வைக்கப்பட்டு இருந்த சுமார் 490 கிராம் பசை வடிவிலான தங்கம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

அதனை அடுத்து, அதன் மதிப்பு ரூபாய் 22 லட்சம் என்றும், அதில் சுமார் 421 கிராம் தங்கம் கலந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்து அதனை யார் கடத்தி வந்தது என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பிட்ட நாட்டுக்கு செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு 2 வாரங்களுக்கு தடை – காரணம் என்ன?