“தலையில் வழுக்கை, திருமணம் நடக்கல”… முடி மாற்று சிகிச்சை செய்த இந்தியர் – கடுமையான முறையில் மரணம்

hair-transplant death indian
Pixabay

தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் முடிமாற்று அறுவைச் சிகிச்சை செய்து தன்னுடைய அழகு தோற்றத்தை பெற நினைத்த ஆடவர் மரணமடைந்தார்.

தனக்கு திருமணம் நடக்காமல் இருக்க அது தான் காரணம் என எண்ணிய 30 வயதுமிக்க அவர் சிகிச்சைக்கு பின்னர் கடும் நோய்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் புதிய COVID-19 நோய்த்தொற்றுகள் அலை…? அரசாங்கம் கூறும் தகவல்

இந்த சம்பவம் இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதர் ரஷீட் என்ற அவருக்கு சிகிச்சைக்கு பிறகு தலையில் வீக்கம் ஏற்பட்டு அது பரவியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

மிக கடும் முறையில் மகன் மரணம் அடைந்ததாக அவரின் தாயார் கூறியுள்ளார்.

முதலில் ரஷீட்க்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாகவும், பிறகு உடலிலுள்ள இதர உறுப்புகளும் செயலிழந்தாகவும் தாயார் கூறினார்.

இந்நிலையில், சிகிச்சை தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படவுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்டுமான நிறுவனத்தின் கிரேன் கவிழ்ந்து விபத்து