சர்வதேச நிறுவனங்களில் சீனாவுக்கு அதிக செல்வாக்கை ஏன் கொடுக்க வேண்டும்? – சிங்கப்பூர் பிரதமர் லீயிடம் கேள்வி

It is better that China be part of the international finance system than not be part of it, said PM Lee

சிங்கப்பூர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை அமெரிக்கா ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் அமைக்கப்பட்டன.உலகப் பொருளாதாரத்தின் சமநிலையில் மாற்றம் ஏற்படும் பொழுது தற்போதைய பொருளாதார நிலையே இருக்க அனுமதிப்பது சட்டப்பூர்வமான கேள்விகளை எழுப்பலாம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் கூறினார்

1944-ல் நடைபெற்ற Bretton Woods மாநாட்டில் இரண்டு பொருளாதார நிறுவனங்களும் நிறுவப்பட்டன. அங்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்க உலக நாடுகள் ஒருங்கிணைந்தன .அப்போது ஒப்பந்தம் கையெழுத்தானது.

அன்றைய ஒப்பந்தத்தின்படி, உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும் , சர்வதேச நிதி ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் ஐரோப்பியராகவும் இருப்பார். உலக வங்கி மற்றும் IMF உறுப்பினர்களின் வாக்களிப்புகள் அந்த நேரத்தில் பொருளாதாரத்தின் நிலையை பிரதிபலிப்பதாக பிரதமர் லீ உரையாடலின்போது தெரிவித்தார்.

காலப்போக்கில் பங்குகள் ஓரளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.ஆனால் மிகவும் ஓரளவு மட்டுமே அவை மாற்றியமைக்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டு கூறினார்.

“நீங்கள் ஏன் சீனாவுக்கு அதிக செல்வாக்கை வழங்க விரும்புகிறீர்கள் என்பது கேள்வியல்ல,ஆனால் உலகப் பொருளாதாரத்தின் சமநிலை முற்றிலுமாக வித்தியாசமாக இருந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட பொருளாதார நிறுவனத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் அதன் உட்பொருள் என்ன? உலகப் பொருளாதாரத்தின் ஒருபகுதியாக சீனர்கள் இருப்பதை உங்களால் தடுக்க முடியாத நிலையில், தற்போதைய நிலை இன்னும் நீடிக்குமா?” மேலும் இந்த சர்வதேச நிறுவனங்களில் சீனாவுக்கு அதிக செல்வாக்கை அமெரிக்கா ஏன் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் பிரதமரிடம் கேட்டனர்

அமெரிக்கா தற்போதைய நிலையை தொடரலாம் ஆனால் AIIB வங்கியைப் போலவே சீனர்கள் உலகத்துடன் ஈடுபடுவதற்கான மற்றொரு வழியாக தங்கள் சொந்த நிறுவனங்களை நிறுவுவார்கள் என்று பிரதமர் பதிலளித்தார்