சிங்கப்பூர் விமான பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் தீபாவளி சிறப்பு பரிசு..!!

Photo: Air India

சிங்கப்பூருக்கு வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் திருச்சியில் இருந்து தினந்தோறும் விமானங்களை இயக்கப் போவதாக, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக சென்னை, துபாய், சார்ஜா ஆகிய பகுதிகளுக்கு திருச்சியில் இருந்து விமானங்களை இயக்கப் போவதாக, ஏர்-இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து துவங்கும் இந்த சேவைகள், 2020ம் ஆண்டு மார்ச், 30ம் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விமான பயணிகளுக்கு இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.