உலகெங்கும் வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக குதூகலமாக கொண்டாடப்படும் பொங்கல் விழா, தை மாதம் முதல் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரில், LISHA சார்பாக பொங்கல் ஒளியேற்றும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் லிட்டில் இந்தியா வண்ணமிகு ஒளி அலங்காரங்களால் கண்ணுக்கு விருந்தாய் அமையும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் திருநாளினை ஒன்றிணைக்கும் நட்சத்திரங்களான கால்நடைகள் லிட்டில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளன.
ஜனவரி 10 முதல் ஜனவரி 18 வரை பொங்கல் ஹெரிடேஜ் கார்னிவலில் உள்ள கால்நடை பண்ணைக்கு வந்து மாடுகளை பார்வையிடலாம் என்று LISHA தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளது.
Source : LISHA