சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 1,111 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 21) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9000-ஐ கடந்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 9,125ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் 19வது வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு..!
புதிய சம்பவங்களில், 20 பேர் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், இன்று இரவு செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் விதிமுறைகளை மீண்டும் மீறியதற்காக 9 பேருக்கு தலா S$1,000 அபராதம்..!