சிங்கப்பூரில் புதிதாக மேலும் 13 பேருக்கு COVID-19 உறுதி; மொத்த சம்பவம் 200ஆக உயர்வு..!

சிங்கப்பூரில் புதிதாக 13 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; அனைத்து விசாக்களையும் ரத்து செய்தது இந்தியா..!

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 97ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிதாகக் கிருமித்தொற்றியவர்களில் ஒருவர் சாஃப்ரா ஜூரோங் குழுமத்துடன் தொடர்புடையவர்.

9 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.

2 பேர் முன்னர் இந்த கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

ஒருவருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தொடர்பில்லை.

இதையும் படிங்க : இந்தியாவிற்கான SIA மற்றும் சில்க் ஏர் விமானங்கள் ரத்து..!

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil