COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி..!

சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 22) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 455ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூருக்குள் நுழையவோ அல்லது செல்லவோ இவர்களுக்குத் தடை..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 144ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 309 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 18 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டாய உத்தரவை மீறிய 89 பேரின் வேலை அனுமதி ரத்து..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil