சிங்கப்பூரில் புதிதாக 271 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் நேற்று (18/12/2021) மதியம் 12.00 PM மணி நிலவரப்படி, புதிதாக 271 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 227 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 221 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளில் 44 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,75,655 ஆக உயர்ந்துள்ளது.

இரண்டாவது முறையாக காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தது காவல்துறை!

கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 810 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, 466 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 60 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 35 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 5 பேரின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் சுமார் 20 வருடங்கள் பணிபுரிந்த வெளிநாட்டவர் – இறுதியாக சொந்த வீடு கனவு நிறைவேறியது!!

நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த 501 பேர் வீடு திரும்பியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேருக்கு ‘ஒமிக்ரான்’ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.