ஜூரோங் தீவில், JTC மற்றும் தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) அறிவித்த பசுமையாக்கும் முயற்சியில் அடுத்த கட்டமாக, மூன்று ஆண்டுகளில் சுமார் 30,000 மரங்கள் நடப்பட உள்ளன.
இந்த பசுமை முயற்சிக்கு நிதியளிப்பதற்காக, தொழில்துறை தோட்டத்திலுள்ள வணிகங்கள் இதுவரை, $500,000 க்கும் அதிகமான தொகையை திரட்டியுள்ளனர். எண்ணெய், எரிவாயு நிறுவனமான எக்சான்மொபில் $120,000 நிதியையும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய ‘அஸ்ப்ரி’ எனும் சங்கம் $90,000 நிதியையும் வழங்கியுள்ளன.
தற்போது 100-க்கும் மேற்பட்ட பெட்ரோலியம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் சிறப்பு இரசாயன நிறுவனங்கள் ஜூரோங் தீவில் உள்ளன. சிங்கப்பூரின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த தீவில் கூடுதல் பசுமை மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உதவ வேண்டும் என்று NParks கூறியுள்ளது.
இந்த பசுமை சுற்றுச்சூழல் அமைப்புக்கு மிகப்பெரிய பயனளிக்கும் என்றும், ஜூரோங் தீவில் பணிபுரியும் அழகை அதிகரிக்கும், என்று ஸ்ட்ரீட்ஸ்கேப்பின் NParks குழு இயக்குனர் ஓ சியோ ஷெங் கூறினார்.
ஜூரோங் தீவில் கடந்த மார்ச் முதல் சுமார் 2,000 மரங்கள் நடப்பட்டுள்ளன, தற்போது மொத்தம் சுமார் 10,000 மரங்கள் உள்ளன.