சிங்கப்பூரில் நண்பகல் (ஆகஸ்ட் 06) நிலவரப்படி, புதிதாக 301 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 54,555ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் தற்கொலை எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை – MOM
புதிய சம்பவங்களில், 4 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதில் மூன்று பேர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்றும், ஒருவர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.