சிங்கப்பூரில் நண்பகல் (ஆகஸ்ட் 02) நிலவரப்படி, புதிதாக 313 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
இதனுடன் சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 52,825ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதை அடுத்து தலைமை பூசாரி கைது..!
புதிய சம்பவங்களில், சமூக அளவில் ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதே போல வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் ஜன்னல் விளிம்பில் நின்று கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் கைது..!