உணவு விடுதியில் நாற்காலிகளை தூக்கி எரிந்து சண்டையிட்ட 4 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.!

சிங்கப்பூரில் பொதுவெளியில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டன.

Balestier சாலையில் உள்ள Bak Kut Teh உணவு விடுதியில் தகாத முறையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக சண்டையிட்ட 4 பெண்கள் போலீசாரால் கடந்த ஜூன் 12 கைது செய்யப்பட்டனர்.

அந்த பெண்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகள் திட்டிக்கொண்டு உணவு விடுதியில் உள்ள நாற்காலிகளை தூக்கி எரிந்து சண்டையிடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு பெண் இன்னொரு பெண்ணை தாக்கும் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது. தடுக்க சென்ற அருகில் உள்ள ஆண்களையும் கண்டுகொள்ளாமல் அவர்கள் ஒருவரைக்கொருவர் மோதி கொண்டனர். சண்டையிட்ட பெண்கள் 30 – 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.