சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Image Credits : CNBC

சிங்கப்பூரில் நண்பகல் (ஜூன் 10) நிலவரப்படி, புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 38,965ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்களில், 7 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 4 பேர் வேலை அனுமதி பெற்றவர்கள் மற்றும் 3 பேர் சிங்கப்பூரர் அல்லது நிறந்தரவாசி என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.