சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரை பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 7 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் 37 முதல் 76 வயதுக்குட்பட்ட நபர்கள் என்றும், அதில் 6 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விண்ணைத்தொடும் வாடகை – இதுவரை இல்லாத அளவுக்கு வாடகை அதிகரிப்பு
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக ஆங் மோ கியோ காவல் பிரிவு அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 19) ஆங் மோ கியோ அவென்யூ 1ல் அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையின் போது, S$6,000க்கும் அதிகமான பணம் மற்றும் சூதாட்டம் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பிடிபட்ட அந்த ஏழு பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
FIFA உலகக் கோப்பை: முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த Host நாடு என்ற வரலாற்றில் இடம்பெற்ற கத்தார்