சிங்கப்பூரில் மேலும் 75 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிப்பு..!

75 new COVID-19 cases in Singapore
75 new COVID-19 cases in Singapore

சிங்கப்பூரில் புதிதாக 75 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 4) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,189ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 அறிகுறி சுய பரிசோதனை இணையத் தளம் அறிமுகம்..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 297ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 500 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

386 நபர்கள் மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது. அவர்கள் கான்கார்ட் சர்வதேச மருத்துவமனையில் (Concord International Hospital) தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 6 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 40 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

29 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் நான்கு சம்பவங்களுக்கு முஸ்தபா சென்டர் குழுவுடன் தொடர்புள்ளது, மொத்தம் 19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 4) ஒருவர் உயிரிழந்தார், இதுவரை மொத்தம் ஆறு பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஆறாவது நோயாளி உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!