சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மேலும் 78 தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனுடன் சேர்த்து மொத்தம் 241 தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 246 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று..!
அவற்றில் 72 தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் 6 தற்காலிக கட்டுமான தளங்கள் ஆகியவை அடங்கும்.
சிங்கப்பூரில் குணமடைந்த ஊழியர்களுக்கான தங்கும் விடுதிகளில் மூன்று பிளாக்குகளில் கிருமித்தொற்று முற்றிலும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 14 விடுதிகளில் கிருமித்தொற்று முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 87,000 ஊழியர்கள் குணமடைந்துள்ளனர் அல்லது கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கிருமித்தொற்று இல்லாத இடங்களில் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் சென்றுவந்த புதிய இடங்களில் பட்டியலில் 6 இடங்கள் சேர்ப்பு..!