சிங்கப்பூர் வீதிகளில் சீறிப்பாய்ந்து சென்ற அழகிய குதிரை – காணொளி…!

A beautiful horse that roamed the streets of Singapore
A beautiful horse that roamed the streets of Singapore

எங் நியோ அவென்யுவில் வெள்ளைக் குதிரை ஒன்று வீதியில் பாய்ந்து செல்லும் அரிய காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த அழகிய காட்சியை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் மூழ்கினர்.

Bebe Joelle என்பவர் பதிவு செய்த அந்தக் காணொளி, முகநூலில் 10,000 முறைக்கு மேல் பகிரப்பட்டது.

Can’t believe what just passby us ? ?

Posted by Bebe Joelle on Sunday, April 5, 2020

இந்த காணொளிக்கு பல நெட்டிசன்கள் கருத்துக்களை வேடிக்கையாக பதிவேற்றம் செய்து வந்தனர்.

அதில் “மனிதர்கள் வீட்டில் அடைபட்டுள்ள இந்த வேளையில், விலங்குகள் வெளியே வந்துவிட்டன” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த குதிரை, டர்ஃப் கிளப் ரோட்டில் உள்ள பைசனோ போலோ அகாடமி எனும் பந்தயக் குதிரைக் கழகத்தைச் சேர்ந்ததாகத் தெரியவந்துள்ளது. அது பந்தய அரங்கிலிருந்து எப்படியோ தப்பி வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

அதை தொடர்ந்து 15 நிமிடத்தில் குதிரை பிடிப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி விலங்கு, கால்நடைச் சேவையகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.