வெளிநாட்டு ஊழியர்களுக்கும், சிங்கப்பூர்வாசிகளுக்கும் இந்திய திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் வெளியிட்ட காணொளி..!

A message from Kamal Haasan
A message from Kamal Haasan (படம்: Facebook/S. Iswaran)

COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களும், சிங்கப்பூர்வாசிகளும் நிச்சயம் வெல்வார்கள் என்று இந்திய நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தொடர்பு, தகவல் அமைச்சர் S. ஈஸ்வரன் அந்தக் காணொளியைத் தமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 799 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

சிங்கப்பூர் அரசாங்கம் போதிய உதவிகளை வழங்கிவருவதாகவும், மக்கள் பாதுகாப்பான இடைவெளி போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்றும் திரு. கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். இந்த கிருமித்தொற்று உலகெங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது இந்த கொடிய கிருமித்தொற்றிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்திற்கு நிகரான பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்றும் திரு. கமல் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் அதன் கடமையைச் செய்து வருவதாகவும், அதனால் பொது மக்களும் அதற்கு உதவியாக அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடப்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

உலக அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அதை ஒரு நாள் நாம் கட்டாயம் வெல்வோம்; அதில் சிங்கப்பூரின் பங்கும் இருக்கும் என்றும் திரு. கமல் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் உட்பட இருவர் பலி..!