சிங்கப்பூர் ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கார் மோதும் காணொளி..!

Depot Road accident

சிங்கப்பூர் டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோவில் அருகே கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 5) சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. Roads.sg இணையப்பக்கத்தில் நேற்று இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.

ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோவில் வெளியே இருவழிச் சாலையில் ஒரு புறம் வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. கோயிலிருந்து தாயாருடன் வெளியில் வந்த சிறுவன் சாலையை கடக்க ஓடிச் செல்லும் போது எதிர்ப்புறத்திலிருந்து வந்த கார் ஒன்று அச்சிறுவன் மீது மோதியது.

அதிர்ஷ்டவசமாக கார்க்கு அடியில் சிக்கிக்கொண்ட சிறுவன் எந்த காயமும் இன்றி கார் சென்றதும் எழுந்து நடந்தான்.

அச்சத்தில் பதறிப்போன சிறுவனின் தாயார் கதறியபடி சிறுவனை தூக்கி அனைக்கும் காட்சிகள் காண்போர் மனதை பதைபதைக்கச் செய்கிறது.