சிங்கப்பூரில் COVID-19 தொற்றில் 1604-வது சம்பவத்தில் பதிவான இந்தியர் ஒருவர் சோதனை முடிவுகளுக்காக காத்திருந்தபோது, அந்த முடிவுகளை பெறும் முன்னரே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
32 வயதான அவர் இந்திய நாட்டை சேர்ந்தவர் என்றும், நீண்ட கால வருகை அனுமதியில் அவர் சிங்கப்பூரில் தங்கி வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 7ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, அவர் தங்கியிருந்த இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ஏப்ரல் 8ஆம் தேதி அவர் உயிரிழந்ததாக MOH குறிப்பிட்டுள்ளது.
அவரது மார்பு எக்ஸ்ரேவில் அவருக்கு நிமோனியா இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.