COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் பட்டியலில் 7 புதிய இடங்களைச் சுகாதார அமைச்சகம் (MOH) சேர்த்துள்ளது.
புதிய இடங்களில் ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடு, புகிஸ் + ஷாப்பிங் மால் மற்றும் தேக்க நிலையம் ஆகியவை இதில் அடங்கும்.
இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் (SIA) பயணிகள் எண்ணிக்கை 99.3 % சரிவு..!
குறிப்பிட்ட அந்த இடங்களில் இருந்தவர்கள், அங்கு சென்றுவந்த நாளிலிருந்து 14 நாட்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இடங்களைப் பொதுமக்கள் தவிர்க்கத் தேவையில்லை என்றும் MOH கூறியுள்ளது.
துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்க தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கொரோனா எதிரொலி: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா..!