கொள்ளையில் ஈடுபட்ட துஷீந்தர் சேகரனுக்கு சிறை, பிரம்படி – கார்த்திக் வழக்கு நிலுவை!

Singapore Caning
Singapore Caning

ஜூரோங் ஈஸ்ட்டில் உரிமம் பெற்ற பணம் மாற்றுக்காரரிடம் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுப்பட்டதற்காக, 22 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை துஷீந்தர் சேகரன் என்ற அவர் நேற்று (பிப்ரவரி 3) ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூர் காட்டில் 33 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த மர்ம மனிதர் – யார் அவர்?

மற்ற இருவருடன் சேர்ந்து, நிரந்தர வாசியான சேகரன் கடந்த 2020 நவம்பரில், ஜூரோங் கேட்வே சாலையில் அமைந்துள்ள “OT கிரெடிட்” பணம் மாற்றுக்காரரிடம் சுமார் S$48,000-ஐ கொள்ளையடித்துள்ளார்.

இரண்டு பெண் கடை உதவியாளர்கள் மட்டுமே அப்போது இருந்ததால், கார்த்திக் ஸ்டால்னிராஜ் மற்றும் கோட்டா குமார் ஜெஸ்வந்த் ஆகிய அந்த இருவருடன் சேர்ந்து சேகரன் கடையை குறிவைத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன என்று TODAY கூறுகிறது.

கார்த்திக்கின் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சம்பவம் நடந்த அந்த நேரத்தில் கோட்டா 21 வயதிற்குட்பட்டவராக இருந்ததால், அவர் சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டார்.

பல மாதங்களாக பின்தொடர்ந்து… லிப்டில் வைத்து பெண்ணிடம் தவறாக நடந்த ஆடவருக்கு சிறை