கத்திக்குத்து தாக்குதல்: 9 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்து அதிரடி காட்டிய போலீஸ்

காமன்வெல்த்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் இருவர் ஒன்பது மணி நேரத்திற்குள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 26 மற்றும் 28 வயதுடைய இருவர் என்றும், அந்த சம்பவம் காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட், பிளாக் 413இல் நேற்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) காலை 10.30 மணியளவில் நடந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா செல்லும் பயணிகள் கவனத்திற்கு!! – தெரிந்துகொள்ள வேண்டிய தற்போதைய கட்டுப்பாடுகள்

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் இடது கையில் வெட்டுக் காயமும், முதுகில் கத்தியால் குத்தப்பட்ட காயமும் ஏற்பட்டது.

பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது சுயநினைவுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

சிங்கப்பூர் போலீஸ் கூறுகையில்; அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தை நோக்கி பாதிக்கப்பட்டவர் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​இருவர் அவரை அணுகினர்.

பின்னர் கத்தி ஏந்தியதாகக் கூறப்படும் இருவரில் ஒருவர், பாதிக்கப்பட்டவரைப் பின்னால் இருந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது திட்டமிட்ட தாக்குதல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

லேப்டாப் வாங்க வசதியில்லா வெளிநாட்டு ஊழியர்: நன்கொடை செய்த IRR அமைப்பு… இரட்டை சம்பளத்தில் வேலை பெற்று அசத்தல்