இனி இந்த தவறு நடக்காது என்று பாதுகாப்பு, CCTV-யை அதிகப்படுத்திய சாங்கி விமான நிலையம்..!

Chnagi Airport improve Security at baggage handling place

சாங்கி விமான நிலையத்தில் பயணத்தின் போது எடுத்துச்செல்லப்படும் பயண உடமைகளை கையாளும் இடத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தியுள்ளதாக என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தில் ஏறக்குறைய 300 பயண உடமைகளின் டேக்’களை மாற்றியமைத்ததற்காக முன்னாள் பயண உடமைகளை கையாளுபவர் திங்கள்கிழமை (நவம்பர் 11) சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அதன் பயண உடமைகளை கையாளும் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு (CAG) தெரிவித்துள்ளது.

கூடுதலாக, அதன் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் அதிகமாக பொருத்தப்படும் என்றும், மேலும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூடுதல் பயிற்சியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறாக வழிநடத்தப்பட்ட பயண பைகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் சில்க் ஏர் ஆகியவற்றின் பயணிகளுக்கு சொந்தமானது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும், அவை நவம்பர் 8, 2016 முதல் பிப்ரவரி 6, 2017 வரை பயணித்த பயணிகளுக்கு சொந்தமானது என்றும் கூறியுள்ளது.