சிங்கப்பூரில் வெளிநாட்டை சேர்ந்த ஊழியர் ஒருவர் உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட அவர், 27 வயதான பங்களாதேஷ் ஊழியர் என்று MOH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கட்டுமானம், கப்பல் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வைக் கழிவு நீட்டிப்பு..!
அவர் உயரத்திலிருந்து கீழே விழுந்த காரணத்தால் பலத்த காயங்கள் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து கடத்த ஜூன் 25 அன்று அவர் உயிரிழந்ததாக MOH அறிவித்துள்ளது.
அவருக்கு கடந்த ஜூன் 6 அன்று தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 291 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், புதிய நபர்களின் 280 பேர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 43,000ஐ கடந்தது..!