சிங்கப்பூரில் COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்ட 38 வயதான பங்களாதேஷ் ஊழியர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்புக்கு இதய நோய் காரணம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் நாயை மாடியிலிருந்து தூக்கி எறிந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை..!
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜூன் 28 அன்று இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரின் மரணத்துக்கு கொரோனா கிருமித்தொற்று காரணமில்லை என்பதால், அவரது இந்த மரணம் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
சிங்கப்பூரில் ஏற்கனவே மொத்தம் 26 பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 கிருமித்தொற்று முற்றிலும் இல்லை..!