சிங்கப்பூர் குடியிருப்புகளில் அதிக தொந்தரவு செய்யும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க எளிய வழிமுறைகள்..!

நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மறைந்திருக்கும் ​​மூட்டை பூச்சி வெளியே வந்து உங்களைத் தாக்கும், உதறிவிட்டு படுத்தாலும் அவை மீண்டும் மீண்டும் உங்களை தொந்தரவு செய்யும். இது சிங்கப்பூர் குடியிருப்புகளில் ஊழியர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று.

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனிதன் அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன.

மனைவிக்கு போதைமருந்து கொடுத்து சக ஊழியருக்கு இரையாக்க கணவன் சதி – ஊழியருக்கு சிறை

இப்படிப்பட்ட தொல்லைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற கேள்வி உங்களுக்கு இருந்துகொண்டே இருக்கும், வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே இதற்கான தீர்வுகளை சுலபமாக காணலாம்.

வேப்ப எண்ணெய்:

இந்தியாவின் வட பகுதிகளில் அதிகமாக காணப்படும் வேப்ப மர இலையில் இருந்து தயாரிக்கப்படுவதே வேப்ப எண்ணெய்.

மூட்டைப்பூச்சிகள் உட்பட பல நுண்ணிய உயிரினங்களை அழிக்க, நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்களுக்காக நன்றாக அறியப்படும் இந்த மரம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பீன்ஸ் இலைகள்:

மூட்டைப்பூச்சிகளை விரட்ட இயற்கை கொடுத்துள்ள பரிசு தான் பீன்ஸ் இலைகள். பூச்சிகளை விரட்ட பழமையான காலம் முதல் இந்த இலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போதைய மக்களுக்கு இதன் பயன்கள் தெரிவதில்லை.

இந்த இலைகள் மூட்டைப்பூச்சிகளை ஒழிக்கும் என புதிய ஆராய்ச்சி ஒன்று உறுதி செய்துள்ளது. இந்த இலைகளில் உள்ள ரோமங்கள் இந்த பூச்சிகளை கொல்ல உதவுகிறது.

கிராம்பு:

கிராம்பு எலுமிச்சைப் பழத்தைப் போலவே செயல்படுகிறது. இந்த மூட்டை பூச்சை தடுக்க நீங்கள் கிராம்பு எண்ணெயை மெத்தை மற்றும் தலையணைகளில் வைக்கலாம்.

புதினா:

புதினா இலைகளின் வாசனை என்றால் மூட்டைப் பூச்சிகளுக்கு ஆகவே ஆகாது. அதனால் அவைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். கொஞ்சம் புதினா இலைகளை எடுத்து, நீங்கள் தூங்கும் பகுதியில் வைத்துக் கொள்ளவும். குழந்தை தூங்கும் தொட்டிலிலும் கொஞ்சம் போட்டுக் கொள்ளலாம்.

மூட்டைப்பூச்சிகள் விரட்டியாக இந்த புதினா இலைகள் செயல்படும். உங்களுக்கு ஏதுவாக இருந்தால், உங்கள் சருமத்தின் மீதும் கொஞ்சம் இலைகளை தேய்த்துக் கொள்ளலாம்.

கத்திக்குத்து தாக்குதல்: 9 மணிநேரத்துக்குள் சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்து அதிரடி காட்டிய போலீஸ்