தற்போதைய இக்கட்டான காலகட்டத்தில் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் மன அளவில் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க நாட்டியத்தின் மூலம் பரத நாட்டிய கலைஞர்கள் ஆறுதல் அளித்துள்ளனர்.
பாஸ்கர்ஸ் கலைக்கூடம் (Bhaskars Arts Academy) வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு காணொளியை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
வெளியிடப்பட்ட அந்த காணொளியில் சுமார் 14 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
This is our humble dedication to the migrant workers who have given their blood, sweat and tears to build our nation. Stay strong dear brothers. We are rooting for you!#Covid19 #dedicationtothededicated #staystrong
Posted by Bhaskar's Arts Academy on Monday, April 27, 2020
சமீபத்தில் பல்வேறு சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பெருமக்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர், அந்த வரிசையில் தற்போது இந்த பரதநாட்டியமும் இணைந்துள்ளது.