சிங்கப்பூரில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக 34 வயது வெளிநாட்டு ஊழியர் மீது நேற்று (பிப் 16) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி பயனியர் சாலைக்கு அருகில் சார்ஜென்ட் ஃபிர்ஹான் அப்துல் ரஷீதிடம் $55 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீண்ட கால அனுமதி உடையோருக்கு VTP பயண அனுமதி அவசியம் இல்லை – அப்போ Work Permit அனுமதிக்கு?
கிருஷ்ணா ராவ் நரிசாமா நைடூ என்ற அவர் இதில் 2 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.
மலேசியரான அவர், போக்குவரத்து விபத்து தொடர்பாக தன்னிடம் விசாரிக்க வேண்டாம் என்று அந்த அதிகாரிக்கு S$5 மற்றும் S$50 லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
சார்ஜென்ட் ஃபிர்ஹான் இந்த அதனை நிராகரித்ததாகவும், வழக்கு லஞ்ச தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் ஊழல் தடுப்பு புலனாய்வுப் அமைப்பு கூறியது.
கிருஷ்ணா S$7,000 ஜாமீனில் வெளிவந்துள்ளார், மேலும் அவர் மீண்டும் மார்ச் 2ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு வருவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு S$100,000 வரை அபராதமும், ஒவ்வொரு குற்றத்திற்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.