சிங்கப்பூர் தெம்பனிஸ் சந்திப்பில் சென்றுகொண்டிருந்த காரில் தீடீர் தீ..!

Car engulfed in flames at Tampines junction
Photo: Facebook/Singapore Road Accident.

சிங்கப்பூரில் நேற்று (27-09-2020) இரவு தெம்பனிஸ் அவென்யூ 2, தெம்பனிஸ் ஸ்டிரீட் 23 சாலை சந்திப்பில் சென்றுகொண்டிருந்த காரில் தீடீரென தீ பற்றி எறிந்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினருக்கு (SCDF) இரவு 8.50 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அக்டோபர் மாதம் முதல் இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்.!!

பின்னர், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து உடனடியாக தீயை அணைத்தனர். காரில் தீ பற்றியதுடன் ஓட்டுனர் மற்றும் காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கினர்.

இந்த சம்பவத்தில், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், காரில் தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலையின்போது கீழே விழுந்ததில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – இழப்பீடு கோரி வழக்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…