சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இளைஞர் கைது – போலிஸ் விசாரணை

(Photo: Indian Express)

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஒருவர் பிடிபட்டார்.

சென்னையை சேர்ந்த அந்த இளைஞர் தன் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானம், சென்னைக்கு மாற்றம்: கடும் அவதியை சந்தித்த பயணிகள்!

அதே போல, ரகசிய தகவலின் அடிப்படையில் இலங்கையை சேர்ந்த இரு பெண்களும் அதே தங்கம் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

ஒரே நாளில் மட்டும் அந்த 3 பேரிடம் இருந்து சுமார் 1 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் இந்திய மதிப்பு ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரில் சமீபத்தில் அதிகரித்த வேலையிட மரணங்கள்: விபத்தை தடுக்க அசத்தல் திட்டத்துடன் MOM ரெடி