சிங்கப்பூரில் பிளாக் 602 கிளெமென்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 1ல், கடந்த மே 4 அன்று இரவு 11 மணியளவில், ஆடவர் ஒருவர் தன் தங்கையை மரக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மே 5 புதன்கிழமை காலை 6.30 மணியளவில் குறிப்பிடப்பட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து இந்த சந்தேகத்திற்கு உரிய மரணம் தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு
அதிகாரிகள் வரும்போது அந்த பெண் அசைவுகள் அற்று இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், அந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆடவர் வேண்டுமென்றே கடுமையாக பெண்ணை தாக்கியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆடவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதே பிளாக்கில் வசித்து வரும் அவர்களின் ஒரு பக்கத்து வீட்டுக்காரர், கடந்த வாரம் முதல் முறையாக அந்த அண்ணன் தங்கையை ஒன்றாக பார்த்ததாக கூறியதாக சீன ஊடகமாக 8 வோல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.