பாதசாரி மீது மோதிய பேருந்து – கவனக்குறைவாக இயக்கிய ஓட்டுநர் கைது

Compassvale junction accident

செங்காங்கில் நேற்று முன்தினம் செப்.29 அன்று 74 வயதான பாதசாரி ஒருவர் மீது பேருந்து மோதியது, இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காம்பஸ்வேல் சாலை மற்றும் காம்பஸ்வேல் டிரைவ் சந்திப்பில் இரவு 10.50 மணியளவில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“ஏன்பா தேவையில்லை வேலை…” – இந்திய ஊழியருக்கு சிங்கப்பூரில் சிறை

அதன் பின்னர் சுயநினைவுடன் பாதசாரி ஆடவர், கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எஸ்.ஜி ரோடு விஜிலன்ட் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட புகைப்படங்கள், பாதிக்கப்பட்டவரைச் சுற்றி பலர் கூடியிருப்பதைக் காட்டுகிறது.

இந்நிலையில், “கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 68 வயதான ஆண் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்” என காவல்துறை கூறியது.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

தெம்பனீஸ் கார்பார்க்கில் விழுந்த பெரிய மரம்: நசுங்கி சேதமடைந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்