சிங்கப்பூரில் ஒரு கட்டுமான தளத்தில் தீ விபத்து – 8 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

construction fire SCDF hospital
construction worker hit by iron rod that owner salary pending

சிங்கப்பூர், 105 வெஸ்ட் கோஸ்ட் வேலில் (West Coast Vale) உள்ள கட்டுமான தளத்தில் இன்று (அக். 20) காலை தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து எட்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

காலை 10.40 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் Hotstar சேவை அடுத்த மாதம் முதல் அறிமுகம்..!

மேலும், தீயை அணைக்க மூன்று குழாய் ரீல்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் கட்டுமானத் தளத்தின் அடித்தளப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில், எட்டு பேர் புகையை சுவாசித்த காரணத்தால் இங் டெங் ஃபாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF தெரிவித்துள்ளது.

மேலும், தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது என்று அது கூறியுள்ளது.

இதையும் படிங்க : இரண்டாவது முறையாக மரண தண்டனையில் இருந்து தப்பிய வெளிநாட்டு ஆடவர்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…