உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு தான் வருகின்றன.
பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மீதான அச்சம் ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம் கொரோனாவை வைத்து பல்வேறு வியாபாரங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கையின் போது ஒன்றுகூடிய 7 வெளிநாட்டவர்களுக்கு அபராதம்..!
குறிப்பாக, முகக்கவசங்கள் பல்வேறு வடிவங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் முக சாயல் கொண்ட முகக்கவசம் முதற்கொண்டு தற்போது கிடைக்கப்பெறுகின்றன.
தற்போது, பெண்களை ஈர்க்கும் வண்ணம் கொரோனா வைரஸ் வடிவில் செய்யப்பட்ட தங்க ஜிமிக்கி கம்மல்கள் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. கொரோனா வைரஸ் வடிவில் அந்த ஜிமிக்கி வடிவமைக்கப்படுவதால் பொதுமக்கள் அதனை ஆர்வமாக வாங்குவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றன.
தற்போது நம்ம சிங்கப்பூரிலும் மக்களின் வரவேற்பை பெற்ற கொரோனா ஜிமிக்கி கிடைக்கிறது. அபிராமி ஜுவல்லரி கொரோனா வடிவிலான அந்த ஜிமிக்கி கம்மல்களை விற்பனை செய்து வருகிறது.
சிங்கப்பூர் மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அபிராமி ஜுவல்லரி மேலாளர், நம் தமிழ் மைக்செட் தளத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க : 7 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட வெளிநாட்டவருக்கு சிறை மற்றும் பிரம்படி..!