சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த தங்களுடைய மகனுக்கு கொரோனா தொற்று இருப்பதால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்துள்ள புள்ளம்பாடியை பகுதியை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார்.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வயதானோருக்கு முதலில் விநியோகிக்கப்படும் TraceTogether கருவிகள்..!
கொரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த ஜுன் 15ஆம் தேதி மதுரை விமான நிலையத்திலிருந்து வந்த அவரை திருச்சி சேதுராப்பட்டி முகாமில் தங்க வைத்து கடந்த 22-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த 24-ம் தேதி பரிசோதனை முடிவில் நோய்த்தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டதால் அன்றைய தினமே அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதனால் மனமுடைந்த அவரின் பெற்றோர் வீட்டிலிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர் இருவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தங்களுடைய மகன் மீதுள்ள பாசத்தினாலும், நோய்த்தொற்று குறித்த போதிய புரிதல் இல்லாததாலும் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : Tamil Medias
இதையும் படிங்க : ஏறக்குறைய 5 மாதங்கள் மருத்துவமனையில் போராடி குணமடைந்த வெளிநாட்டு ஊழியர் – தன் பிறந்த குழந்தையை காண ஆர்வம்..!