சிங்கப்பூரில் மேலும் 256 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

சிங்கப்பூரில் நேற்றைய (மே 9) நிலவரப்படி, புதிதாக 753 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 22,460ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்..!

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களின், ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 739 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 3 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர்.

புதிய சம்பவங்களில் சமூக அளவில் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் சிங்கப்பூர் குடிமக்கள். மேலும், 3 பேர் நிரந்தரவாசிகள் மற்றும் வேலை அனுமதி பெற்றவர்கள் இருவர் அடங்குவர்.

குணமடைந்தோர்

சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 256 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று (மே 9) குறிப்பிட்டுள்ளது.

அதாவது மொத்தம் 2,296 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும் 1,124 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.

மேலும் 19,020 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 753 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!