சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து 322 நபர்கள் மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.
மொத்தம் 23,904 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு சவால்களை சமாளிப்பதற்கு பங்களிக்காத முதலாளிகளுக்கு கடும் விசாரணை..!
மேலும் 303 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவற்றில், பெரும்பாலான நபர்கள் சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகின்றனர். மேலும் 5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH தெரிவித்துள்ளது.
மேலும் 12,691 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.
தங்கும் விடுதிகளில் 4 புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை,
- Kampong Bugis இல் அமைந்துள்ள வேலைத்தளம்
- 212 Tagore Lane
- 63 Tuas South Avenue 1
- 109 Ubi Avenue 4
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் 32,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலிருந்து தற்காலிக இட வசதிகளுக்கு மாற்றம்..!