சிங்கப்பூரில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 12) நிலவரப்படி, புதிதாக 3,099 பேருக்கு COVID-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

வேலை மாறும் ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு MOM அப்டேட்

இதில் உயிரிழந்தவர்கள் 35 மற்றும் 102 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர் தவிர மற்ற அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

35 வயதான தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபருக்கு நாள்பட்ட நோய்கள்
இருந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 562ஆக உயர்ந்துள்ளது.

SBS பேருந்து கதவு மூடியதில் கீழே விழுந்த பெண் (காணொளி) – ஓட்டுனர் மீது நடவடிக்கை