திரையுலகின் பிரபலப் பின்னணிப் பாடகரான சங்கர் மகாதேவன், காணொளி மூலம் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்குச் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் குறிப்பாக அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ் ஊழியர்களுக்காக பாடல் ஒன்றை பாடியும் அசத்தினார்.