லிட்டில் இந்தியா, செரங்கூன் சாலையில் அமைந்துள்ள யுனிவர்செல் மொபைல் மார்க்கெட் கடை பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மூடுமாறு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
லிட்டில் இந்தியா பகுதியில் பல்வேறு வணிக வளாகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் வீதிகளில் சீறிப்பாய்ந்து சென்ற அழகிய குதிரை – காணொளி…!
தற்போது COVID-19 நோய் பரவும் அபாயம் இருக்கும் காரணத்தால், மிகப்பெரிய வணிக வளாகம் மற்றும் பிரபலமான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்மாறு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி லிட்டில் இந்தியாவில் உள்ள மலிவு விலையில் மொபைல் போன்களை விற்பனை செய்யும் நிறுவனமான யுனிவர்சல் மொபைல் நிறுவனம் இன்று பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மற்ற வார நாட்களில் இந்தக் கடையில் அதிக அளவில் மக்கள் திரண்டு வந்து வாங்குவார்கள். எனவே இந்த கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : COVID-19: சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2-இன் செயல்பாடுகள் 18 மாதங்களுக்கு நிறுத்தம்..!