சிங்கப்பூரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ – ரசிகர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு!

Cristiano Ronaldo banned two matches

கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஜூலை 3 ஆம் தேதி அன்று Our Tampines Hub -ற்கு வருகை தந்தார்.

அவரின் வருகையை அறிந்த பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை கான அங்கு ஒன்று கூடினர். அவரின் வருகைக்கான நேரம் குறித்த எந்த வித தகவலும் கொடுக்கப்படாத நிலையில் ரசிகர்கள் அங்கு கூடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக மதியம் 3 மணிக்கு ரசிகர்கள் கூட்டம் அங்கே ரொனால்டோ வருகைக்காக காத்திருந்தது.

மாலை 5 மணிக்கு அந்த இடத்தில் இருந்து ரொனால்டோ புறப்படும் போது அங்கே கூடியிருந்த அவருடைய ரசிகர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சிங்கப்பூரின் சாம்பியன்ஸ் கோப்பைக்கான போட்டி வரும் ஜூலை 21 தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் ஜுவெண்டஸ் அணிக்காக ரொனால்டோ விளையாட வேண்டும் என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் ஒருமித்த ஆசையாக இருந்து வருகிறது.