சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, ஆக அதிகமாக 942 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Daily high of 942 new COVID-19 cases reported in Singapore
Daily high of 942 new COVID-19 cases reported in Singapore

சிங்கப்பூரில் நண்பகல் நிலவரப்படி, புதிதாக 942 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 5,992ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட 558 நபர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுடன் தொடர்பு..!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் என்று MOH கூறியுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 தொடர்பான மருத்துவ சிக்கல்களால் மொத்தம் 11பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் இன்று இரவு வெளியிடப்படும் என்று MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 3 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!