ஆடவர் ஒருவர் குளிக்கும் டிக்டாக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியலறையில் வயதான ஆடவருக்கு குளிக்க உதவி செய்யும் அந்த பணிப்பெண் அதனை காணொளியாக எடுத்துள்ளார்.
சமுக அளவிலான தொற்று: ஒருவருக்கு புதியவகை தொற்றுக்கான ஆரம்ப கட்ட அறிகுறி..
இந்த காணொளி, சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் முதலாளிகளுக்கு ஆதரவு வழங்கும் பேஸ்புக் பக்கத்தில் மறுபதிவு செய்யப்பட்டது, ஆனால் பின்னர் அது அகற்றப்பட்டது.
மேலும், அந்த காணொளி அவரது டிக்டாக் கணக்கிலிருந்தும் அகற்றப்பட்டதாகத் தெரிகிறது.
அந்த வயதான ஆடவரின் மகன் அந்த காணொளியில் தனது தந்தையை அடையாளம் கண்டு, பேஸ்புக் குழுவிலிருந்து அதனை நீக்குமாறு கோரியிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Mothership கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தினர்.
அதனை அடுத்து, 32 வயதான அந்த பணிப்பெண் கடந்த ஜனவரி 3ஆம் தேதி இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
ஜன்னல் விளிம்பில் நின்ற சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது!