சாங்கி விமான நிலையத்தில் முறையான அனுமதி இல்லாமல் வானில் பறந்த Drone கேமராவால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுமார் 37 விமானங்கள் பறப்பதில் கால தாமதம் நிலவியது. மேலும், ஒரு விமான ஓடுபாதையில் விமானத்தை இயக்குவதில் சிக்கல் பல மணிநேரம் நீடித்தது.
செவ்வாய் (ஜூன் 18) மற்றும் புதன்கிழமை அன்று சாங்கி விமான நிலைய அருகாமையில் சுற்றி திரிந்த இந்த drone காரணமாக 10 மணி நேரத்திற்கு மேலாக ஓடுபாதையில் விமானம் பயணிப்பதில் சிக்கல் நிலவியது. இதன் காரணத்தினால் 37 விமானங்கள் பறப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
விமானம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, ஒரு ஓடுபாதையை இயக்குவதில் சிக்கல் நிலவியது, அதன் காரணமாக ஜூன் 18 இரவு 11 மணியில் இருந்து ஜூன் 19 காலை 9 மணிவரை அந்த ஓடுபாதையில் விமானத்தை இயக்குவதை கைவிட்டதாக, ‘ CAAS ‘ கூறியுள்ளது.