மனைவியை பார்க்க சென்ற விடுதியில், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட 78 வயது முதியவர்!!

Elderly man molested nursing home resident while visiting wife

முதியவர் ஒருவர் தனது மனைவியைப் பார்க்க நர்சிங் ஹோமுக்குச் சென்றுள்ளார், சென்ற இடத்தில் அங்குள்ள மற்றொரு பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சட்டப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், ஓய்வுபெற்ற 78 வயதான லா லோய் ஃபாட் என்ற முதியவர், இரண்டு முறை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைப் பார்க்க நர்சிங் ஹோமுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் மனைவியை சந்தித்து பேசியபோது அருகில் பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் தனியாக அமர்ந்திருப்பதை அவர் கவனித்துள்ளார், என்று துணை அரசு வக்கீல் டான் யென் சியோ தெரிவித்தார்.

வக்கீல் டான் அவர்கள் கூறுகையில்: “பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இந்த பெண்மணி ‘உடல்நிலை சரியில்லாமல்’ இருப்பதாகவும், இரு கைகளும் கட்டுப்போடப்பட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் குறிப்பிட்டார்.”

பாதிக்கப்பட்ட 37 வயதான பெண்ணுக்கு பெருமூளை வாதம் உள்ளது, மேலும் அந்த பெண்ணினால் பேசுவதற்கும், தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதும் சிரமம்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பைச் சுற்றி ஒரு கரப்பான் பூச்சி பறப்பதைக் கவனித்த லாவ், அதைத் தூக்கி எறியும் நோக்குடன் அந்த பெண்மணியை நெருங்கி உள்ளார். பெண்ணின் ஆடை தளர்வாகவும், மார்பு ஓரளவு வெளிப்படுவதையும் லாவ் கவனித்துள்ளார். அந்த பெண் உள்ளாடை அணியவில்லை.

லாவ், பின்னர் தனது கையை அந்த பெண்ணின் சட்டைக்குள் வைத்து சுமார் 10 விநாடிகள் தவறாக நடந்துகொண்டார், என்று கூறப்படுகிறது. இதை கண்ட உதவியாளர், என்ன செய்றீங்க? என்று லாவிடம் கேட்டார்.

சுதாரித்து கொண்ட லாவ், பதில் சொல்லாமல் நர்சிங் ஹோமில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்தை ஒரு மூத்த பணியாளர் செவிலியரிடம் தெரிவித்தார், மேலும், போலீஸிடம் தகவல் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து, கடந்த திங்களன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக லாவிற்கு 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Source : Stomp.StraitsTimes