துவாஸ் பகுதியில் தீ – 8 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

Fire accident Tuas SCDF
(Photo: SCDF/FB)

சிங்கப்பூரில், No.32E துவாஸ் அவென்யூ 11இல் இன்று காலை 11.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய 8 பேர் தீ காயங்களுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.

தொழில்துறை கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவி அணிந்து, எச்சரிக்கையுடன் குடியிருப்பு உள்ளே நுழைந்தனர்.

சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவரின் விவரம்!

(Photo: SCDF/FB)

இதில் இரண்டு தண்ணீர் ஜெட் கருவி பயன்படுத்தி தீ அணைக்கப்பட்டது.

SCDF சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன், பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் பக்கத்துக்கு குடியிருப்புகளில் இருந்து சுமார் 65 பேர் சுயமாக வெளியேற்றப்பட்டனர் என்றும் SCDF குறிப்பிட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து SCDF விசாரித்து வருகிறது.

சிங்கப்பூரில் 100வது ஆண்டை நிறைவு செய்யும் உணவகம் – வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இலவச பிரியாணி!