டெஃபு லேனில் உள்ள வாகனப் பட்டறையில் நேற்று (நவ.25) தீ விபத்து ஏற்பட்டது, சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (நவ.25) மாலை 6.40 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது.
பட்டறையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயால் பாதிக்கப்பட்டன, ஆனால் யாருக்கும் எந்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) அதிகாரிகள் போராடி அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறியும் விசாரணை நடைபெற்று வருகிறது.